திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை நெதர்லாந்தில் இருந்து ஸ்வீடனுக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி! தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

கொரநாட்டு கருப்பூர்  அபிராமி சுந்தரேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் அபிராமி சுந்தரேஸ்வரர் (பெட்டி காளியம்மன்) கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :27 மார்ச் 2018, 10:08 am IST

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் அபிராமி சுந்தரேஸ்வரர் (பெட்டி காளியம்மன்) கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பல லட்ச ரூபாய் மதிப்பில் அறநிலையத்துறை, உபயதாரர்கள் மூலம் கோயில் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு, அண்மையில் புனரமைக்கப்பட்டது. இந்நிலையில்,  கடந்த 21 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை 6 நாள்களுக்கு 8 கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டன. இதற்கென கோயிலுக்கு வடக்கு பகுதிகளில் 105 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பல்வேறு கோயில்களிலிருந்து வந்திருந்த 150 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை மேற்கொண்டனர். மேலும் வேத, திருமுறை பாராயணம், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இதையடுத்து,  திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மகா பூர்ணாகுதி தீபாராதனை செய்யப்பட்டு கோயில் ராஜ கோபுரம்,  சுவாமி,  அம்பாள் விமானங்கள் மற்றும் பரிவார சன்னதிகளில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. யாகசாலை மற்றும் கும்பாபிஷேகத்தில் தருமபுரம், திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆதீன கர்த்தர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.