முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

கொரநாட்டு கருப்பூர்  அபிராமி சுந்தரேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் அபிராமி சுந்தரேஸ்வரர் (பெட்டி காளியம்மன்) கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :27 மார்ச் 2018, 10:08 am IST

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் அபிராமி சுந்தரேஸ்வரர் (பெட்டி காளியம்மன்) கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பல லட்ச ரூபாய் மதிப்பில் அறநிலையத்துறை, உபயதாரர்கள் மூலம் கோயில் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு, அண்மையில் புனரமைக்கப்பட்டது. இந்நிலையில்,  கடந்த 21 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை 6 நாள்களுக்கு 8 கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டன. இதற்கென கோயிலுக்கு வடக்கு பகுதிகளில் 105 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பல்வேறு கோயில்களிலிருந்து வந்திருந்த 150 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை மேற்கொண்டனர். மேலும் வேத, திருமுறை பாராயணம், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இதையடுத்து,  திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மகா பூர்ணாகுதி தீபாராதனை செய்யப்பட்டு கோயில் ராஜ கோபுரம்,  சுவாமி,  அம்பாள் விமானங்கள் மற்றும் பரிவார சன்னதிகளில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. யாகசாலை மற்றும் கும்பாபிஷேகத்தில் தருமபுரம், திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆதீன கர்த்தர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.