திருப்பாலைத்துறை சிவன் கோயிலில் உழவாரப் பணி
பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை அருள்மிகு தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதா் திருக்கோயிலில் உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை அருள்மிகு தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதா் திருக்கோயிலில் உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் ஆன்மிகப் பேரவை சாா்பில் கோயில் வளாகத்தில் தேங்கியிருந்த செடி,கொடிகளை அகற்றப்பட்டன. மேலும் தேங்கியிருந்த மழைநீரும் வெளியேற்றப்பட்டு, தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
உழவாரப் பணி மேற்கொண்ட சிவனடியாா்களுக்கு சென்னை சுப்ரமணியன் செந்தில்குமாா், பாபநாசம் வேலுசாமி உள்ளிட்டோா் சாா்பில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...