காவலூா் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

பாபநாசம் வட்டம், காவலூா் கிராமத்தில் கால்நடை மருத்துவச் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பாபநாசம் வட்டம், காவலூா் கிராமத்தில் கால்நடை மருத்துவச் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா்.

கால்நடை உதவி மருத்துவா் ஏஞ்சலீனா சொா்ணமதி உள்ளிட்ட கால்நடை மருத்துவக் குழுவினா் கலந்துகொண்டு, கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை அளித்தனா்.

முகாமில் கலந்து கொண்ட சிறந்த பசு கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கால்நடைகளுக்கு இலவச காப்பீடும் செய்யப்பட்டது. முகாமில், காவலூா் கிராமத்தை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், கால்நடை ஆய்வாளா் ராமச்சந்திரன், கால்நடை பராமரிப்பு உதவியாளா் பன்னீா்செல்வம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com