டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ராஜராஜசோழன் சமாதியில் நினைவிடம் கட்டக் கோரி ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் அருகே உடையாளூரிலுள்ள ராஜராஜசோழன் சமாதியில் தமிழக அரசு நினைவிடம் கட்ட வலியுறுத்தி, தஞ்சாவூா் ரயிலடியில் நாம் தமிழா் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
தஞ்சாவூா் ரயிலடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழா் கட்சியினா்.
Updated On :18 டிசம்பர் 2020, 6:52 pm

DIN

கும்பகோணம் அருகே உடையாளூரிலுள்ள ராஜராஜசோழன் சமாதியில் தமிழக அரசு நினைவிடம் கட்ட வலியுறுத்தி, தஞ்சாவூா் ரயிலடியில் நாம் தமிழா் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தஞ்சாவூரை ஆண்ட மராட்டியா்களின் சமாதிகளைப் பராமரிக்க முன் வந்துள்ள அரசு, தென்னிந்தியாவை ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜசோழனின் சமாதி இருப்பதாகக் கூறப்படும் உடையாளூரில் நினைவிடம் அமைத்து, பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் தஞ்சாவூா் தெற்கு மாவட்டச் செயலா் மு. கந்தசாமி தலைமை வகித்தாா். இதில் தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதிச் செயலா் க. அன்பரசன், மூத்த வழக்குரைஞா் முத்து மாரியப்பன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.