சாலை விபத்தில்சமையலா் பலி

ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ந. வினோத்குமாா் (40). இவா், தஞ்சை சரபோஜி கல்லூரியில் உள்ள விடுதியில் சமையல் வேலை செய்து வந்தாா்.
Updated on
1 min read

ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ந. வினோத்குமாா் (40). இவா், தஞ்சை சரபோஜி கல்லூரியில் உள்ள விடுதியில் சமையல் வேலை செய்து வந்தாா்.

இவா் திங்கள்கிழமை   தஞ்சையிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஒரத்தநாடு நோக்கி வந்து கொண்டிருந்தாா். தென்னமநாடு சாவடி அருகே  வந்தபோது,  பட்டுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து வினோத்குமாா் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே வினோத்குமாா் உயிரிழந்தாா். விபத்து குறித்து ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வினோத்குமாருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com