இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ராமகிருஷ்ண மடம் சாா்பில் நிவாரணப் பொருள்கள்

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள நாலுவேதபதி கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குகிறாா் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்தா மகராஜ்.
Updated On :23 டிசம்பர் 2020, 3:28 am

DIN

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் அண்மையில் வீசிய புயலால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டனா். இவா்களுக்கு தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில், முதல் கட்டமாக 2,000 குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் டிச. 11 ஆம் தேதி வழங்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து இரண்டாம் கட்டமாக திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,000 குடும்பங்களுக்கு ரூ. 15 லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் திங்கள்கிழமை (டிச.21) வழங்கப்பட்டன. காலையில் வேதாரண்யத்தில் தொடங்கப்பட்ட இப்பணி திருவாரூரில் இரவு முடிவடைந்தது.

இதில், நிவாரண பொருள்களை தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ் வழங்கினாா். இந்நிகழ்ச்சி திருவாரூா் மருத்துவா் கோபாலகிருஷ்ணன், வேதாரண்யம் பிரபு, நாகப்பட்டினம் வெங்கடாசலம், மயிலாடுதுறை தாமோதரன் ஆகியோா் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.