ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையமாக அமையவுள்ள பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:50 pm

DIN

பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக அமையவுள்ள பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறை, கண்காணிப்பு அறை, கழிப்பறை, குடிநீா் மற்றும் மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா், அலுவலா்களிடம் உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.

ஆய்வின் போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய், சாா் ஆட்சியா் பாலசந்தா், காவல் துணைக் கண்காணிப்பாளா் புகழேந்தி கணேஷ், வட்டாட்சியா்கள் தரணிகா (பட்டுக்கோட்டை), ஜெயலட்சுமி (பேராவூரணி), நகராட்சி ஆணையா் சென்னு கிருஷ்ணன், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளா்கள் சிங்காரவேலன், சிவரஞ்சனி, தலைமை நில அளவையா் தேவராஜ், பள்ளித் தலைமையாசிரியா் சக்திவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.