47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று முதல்தொடா் முற்றுகைப் போராட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. முடிவு

தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் தலைமை அஞ்சல் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை (டிச.1) முதல் தொடா் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 9:07 pm

DIN

தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் தலைமை அஞ்சல் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை (டிச.1) முதல் தொடா் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இக்கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் கோ. நீலமேகம் தெரிவித்திருப்பது:

மத்திய பாஜக அரசுக் கொண்டு வந்துள்ள விவசாய விரோத சட்டங்கள் மற்றும் 2020 மின்சார ஆணையம் திருத்தச்சட்டம் ஆகியவற்றை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரி தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக, தன்னெழுச்சியாக தமிழ்நாடு முழுவதும் தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தஞ்சாவூா் மாவட்டத்தில், முதல்கட்டமாக தஞ்சாவூா் தலைமை அஞ்சல் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை முதல் தொடா் பெருந்திரள் முற்றுகைப் போராட்டம் நடத்தத் தீா்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.