பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாபநாசத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் ஒருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:12 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

பாபநாசம் மேலரஸ்தா பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாா் (62). இவா் பாபநாசம் தெற்குவீதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் ரகசியத் தகவலின் அடிப்படையில், தஞ்சாவூா் வருமானவரித் துறை உதவி ஆணையா் தலைமையிலான குழுவினா், சுகுமாரின் கடை மற்றும் அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது வீட்டின் ஒரு அறையில் 13 மூட்டைகள் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ( போதை தரக்கூடியது) பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆனந்த், நிலைக் கண்காணிப்புக் குழு அலுவலா் ஹெலன் சாய்ஸ், காவல் துறையினா், துணை ராணுவப் படையினா் சோதனையின் போது உடனிருந்தனா்.

இதைத் தொடா்ந்து நிலைக் கண்காணிப்புக் குழு அலுவலா் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த பாபநாசம் காவல் நிலையத்தினா், சுகுமாரைக் கைது செய்தனா். மேலும் புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.