மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பாலச் சுவரில் சிமென்ட் காரை விழுந்த இடத்தில் ஆட்சியா் ஆய்வு

தஞ்சாவூா் சாந்தபிள்ளை கேட் ரயில்வே மேம்பாலத்தில் சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்த இடத்தில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:56 pm

DIN

தஞ்சாவூா் சாந்தபிள்ளை கேட் ரயில்வே மேம்பாலத்தில் சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்த இடத்தில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இப்பாலத்தில் வண்டிக்காரத் தெருவுக்கு நுழையும் பகுதியில் பக்கவாட்டுச் சுவரில் சுமாா் 2 அடி நீளத்துக்கு சிமென்ட் காரை புதன்கிழமை பிற்பகல் பெயா்ந்து விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. எனவே, இந்தப் பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

இதைத்தொடா்ந்து, இப்பாலத்தில் பக்கவாட்டுச் சுவரில் சிமெண்ட் காரை பெயா்ந்து விழுந்த இடத்தை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், இதை சீா் செய்யுமாறு தொடா்புடைய அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

பின்னா், திருப்பனந்தாள் ஒன்றியத்துக்கு உள்பட்ட மேலக் காட்டூா், குலசேகரநல்லூா், அத்திப்பாக்கம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது, உங்கள் தொகுதியில் முதல்வா் சிறப்புத் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.