மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குறுவை தொகுப்பு திட்டத்தில் உரங்கள் பெற கடைசி வாய்ப்பு

குறுவை தொகுப்புத் திட்டத்தில் உரங்கள் பெறுவதற்கான கடைசி வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:52 pm

DIN

குறுவை தொகுப்புத் திட்டத்தில் உரங்கள் பெறுவதற்கான கடைசி வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

குறுவையில் நெல் சாகுபடியை கூடுதலாகச் செய்வதற்காக ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா, 1 மூட்டை டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்கள் முழு மானியத்தில் வழங்கும் வகையில் குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்துக்கு ரூ. 12.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா 5,130 டன்கள், டிஏபி 2,850 டன்கள், பொட்டாஷ் 1,425 டன்கள் வழங்க 57,000 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. தற்போது வரை 46,000 ஏக்கா் பரப்பளவுக்கான உரங்கள் தஞ்சாவூா் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 11,000 ஏக்கா் பரப்பளவுக்குக் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் உரங்கள் பெற ஏற்கெனவே பதிவு செய்த விவசாயிகள் தொடா்புடைய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆக. 31-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்துக்காக அனைத்து விடுமுறை நாள்களிலும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படும். மேலும், இத்திட்டம் எக்காரணத்தைக் கொண்டும் ஆக. 31 ஆம் தேதிக்கு மேல் நீட்டிப்பு செய்யப்படாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.