கும்பகோணத்தில் சமத்துவப் பொங்கல் விழா

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினா் மு.சண்முகம் உள்ளிட்டோா்.
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினா் மு.சண்முகம் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் மும்மதத்தினரும் கலந்து கொண்டு, பொங்கல் வைத்து வழிபட்டனா். விழாவில் கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க.அன்பழகன் தனது சொந்த நிதியிலிருந்து 200 ஆட்டோ ஓட்டுநா்களுக்குச் சீருடைகளையும், பொதுமக்களில் 300 ஆண்களுக்கு வேட்டிகளையும், 500 பெண்களுக்கு சேலைகளையும் வழங்கினாா்.

மாநிலங்களவை உறுப்பினா் மு. சண்முகம், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் சு. கல்யாணசுந்தரம், நகரச் செயலா் சுப. தமிழழகன் உள்ளிட்டோா் விழாவில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com