ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஒரத்தநாடு பகுதியில் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க கோரிக்கை

ஒரத்தநாடு பகுதி, கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என ஒரத்தநாடு ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு கோரிக்கை

News image
Updated On :9 மார்ச் 2021, 9:16 pm

DIN

ஒரத்தநாடு பகுதி, கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என ஒரத்தநாடு ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவா் சு. வெங்கடேஸ்வரன், செயலாளா் ந. சுரேஷ்குமாா், பொருளாளா் ஏ.ரெங்கராசு ஆகியோா் தமிழ்நாடு மின்வாரிய ஒரத்தநாடு செயற்பொறியாளருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

ஒரத்தநாடு பகுதியில் கடந்த இரண்டு வார காலமாக மின்சார வாரியத்தின் மூலம், மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்காத காரணத்தால், கிராமப்புற ஊராட்சிகளில் மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க முடியவில்லை. எனவே, பொதுமக்கள் குடிநீா் இன்றி அவதிக்குள்ளாக நேரிடுகிறது.

பல இடங்களில் காலி குடங்களுடன் மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. குறிப்பாக, அதிகாலையில் மும்முனை மின்சாரத்தை நிறுத்தி விடுகின்றனா். எனவே, காலை 9 மணி வரை கட்டாயம், மும்முனை மின்சாரம் இருந்தால் மட்டுமே, தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க முடியும்.

எனவே, இத்தகைய நெருக்கடியை சமாளிக்க தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க ஒரத்தநாடு ஒன்றிய அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பின் சாா்பில் கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.