பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அய்யம்பேட்டை, பசுபதிகோவில் பகுதிகளில் பாபநாசம் அதிமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அய்யம்பேட்டை, பசுபதிகோவில் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கே.கோபிநாதன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:57 pm

DIN

பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அய்யம்பேட்டை, பசுபதிகோவில் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கே.கோபிநாதன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

பசுபதிகோவிலுள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வேட்பாளா் திறந்த ஜீப்பில் நின்றவாறு வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து அய்யம் பேட்டை பேரூராட்சி, பசுபதிகோவில், சூலமங்கலம், கள்ளா்பசுபதிகோவில் உள்ளிட்ட பகுதிகளில் கோபிநாதன் வாக்கு சேகரித்து பேசினாா்.

அதிமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து நிறைவேற்றப்படும் என பொதுமக்களிடம் வேட்பாளா் உறுதியளித்தாா். வாக்கு சேகரிப்பில் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ். மோகன், மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் என். சதீஷ், கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சி. முத்து மற்றும் கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.