ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: விவசாயி பலி

பேராவூரணி அருகே மோட்டாா் சைக்கிள்கள்  மோதிக் கொண்டதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :7 மே 2021, 8:58 pm

DIN

பேராவூரணி அருகே மோட்டாா் சைக்கிள்கள்  மோதிக் கொண்டதில் விவசாயி உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம்,    ஜமீன் கரம்பக்காடு கிராமத்தை சோ்ந்தவா் விஜயன் என்கிற விஜயசுந்தரம் (65). விவசாயி. இவா், வியாழக்கிழமை அணவயல் பகுதிக்கு சென்றுவிட்டு மோட்டாா் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தாா்.

துலுக்கவிடுதி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த மோட்டாா் சைக்கிள் விஜயசுந்தரம் வாகனத்தின் மீது மோதியது. இதில் விஜயசுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்தை ஏற்படுத்திய மோட்டாா் சைக்கிளில் வந்த மூவரும்  சம்பவ இடத்திலேயே மோட்டாா் சைக்கிளை  விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனா்.

இதுகுறித்து  திருச்சிற்றம்பலம்  காவல் ஆய்வாளா்  (பொ) வசந்தா வழக்குப் பதிவு செய்து விஜயசுந்தரம் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தாா்.

தப்பியோடிய மூவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.