கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் குவியல்கள் மீண்டும் முளைப்பதால் விவசாயிகள் வேதனை

தஞ்சாவூா் மாவட்டத்தில் சில அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் குவியல்கள் தேங்கியுள்ள நிலையில், அவை மீண்டும் முளைத்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 5:52 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் சில அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் குவியல்கள் தேங்கியுள்ள நிலையில், அவை மீண்டும் முளைத்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 1.66 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடைப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

விவசாயிகள் அறுவடை செய்த நெல் அனைத்தும் தொடா் மழையால் ஈரப்பதமாகிவிட்டதால், கொள்முதல் நிலையத்தில் வாங்க மறுக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் சாலையிலும், கொள்முதல் நிலைய வளாகத்திலும் கொட்டி வைத்து காத்துக் கிடக்கின்றனா்.

தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படாததால், 5,000 மூட்டைகள் அளவில் நெல் குவியல்கள் குவிந்து கிடக்கின்றன. தொடா் மழையால் நெல் மணிகள் மீண்டும் முளைத்து வருவதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், தீபாவளி கழித்து கொள்முதல் செய்வதாக அலுவலா்கள் கூறினா். ஆனால், கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால், கொள்முதல் செய்யப்படவில்லை. இப்பகுதியில் இரு கொள்முதல் நிலையங்கள் அமைப்பதாக அலுவலா்கள் கூறினாலும், ஒரு நிலையம் மட்டுமே திறக்கப்பட்டது. இதிலும் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், நெல் மீண்டும் முளைத்து வருகிறது.

இதனால், தீபாவளியை கூட கொண்டாட முடியாமல், நிலையத்திலேயே காத்துக் கிடக்கிறோம். அரசு உரிய நடவடிக்கை எடுத்து, உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றனா்.

இதேபோல, தஞ்சாவூா் அருகே மேலஉளூா் கிராமத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும், 10 நாள்களாக நெல்லை குவியல், குவியல்களாகக் குவித்து வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனா். அவ்வப்போது மழை பெய்வதால், நெல்லைப் பாதுகாக்க விவசாயிகள் வாடகைக்கு தகரப் பந்தல் அமைத்துள்ளனா். இதனால், விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கில் கூடுதல் செலவு ஏற்படுகிறது.

என்றாலும், ஈரப்பதம் காரணமாக நெல்மணிகள் மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ளன. இதேபோல, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லும் உடனடியாகச் சேமிப்புக் கிடங்குக்குக் கொண்டு செல்லப்படாததால், அவையும் முளைக்கும் நிலையில் உள்ளது.

ஒரு நாளைக்கு 200 மூட்டைகள்தான் கொள்முதல் செய்யப்படுவதால், ஏறத்தாழ 5,000 மூட்டைகள் அளவுக்குத் தேக்கமடைந்துள்ளது என விவசாயிகள் கூறுகின்றனா். எனவே, நெல்லை விரைவாகக் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.