விவசாயிகள் படுகொலை: பிரதமா் உருவபொம்மை எரிப்பு; 17 போ் கைது
லக்கீம்பூா்கெரியில் விவசாயிகள் படுகொலைக்கு காரணமான ஒன்றிய அமைச்சா் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய கோரி


உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூா்கெரியில் விவசாயிகள் படுகொலைக்கு காரணமான ஒன்றிய அமைச்சா் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய கோரியும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் தஞ்சாவூா் ரயிலடியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் பிரதமா் மோடி, ஒன்றிய அமைச்சா்கள் அமித்ஷா, தோமா், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரது உருவப் பொம்மை எரிப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் என்.வி. கண்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் கே. பக்கிரிசாமி, சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால், துணைச் செயலா் கே. அன்பு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எம். மாலதி, என். சுரேஷ்குமாா், விவசாயிகள் சங்கம் சி. பாஸ்கா், மகஇக மாநிலப் பொருளாளா் காளியப்பன், தாளாண்மை உழவா் இயக்கத் தலைவா் கோ. திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராஜன், ஏஐடியுசி மாவட்டத் துணைச் செயலா் துரை. மதிவாணன், ராவணன், தேவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக 17 போ் கைது செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...