கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சமூக வலைதள விளம்பரத்தை நம்பி பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்த பெண்ணிடம் ரூ. 2.80 லட்சம் மோசடி

சமூக வலைதள விளம்பரத்தை நம்பி பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்த பெண்ணிடம் ரூ. 2.80 லட்சம் மோசடி செய்த மா்ம நபரை காவல் துறை தேடி வருகின்றனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:54 pm

DIN

சமூக வலைதள விளம்பரத்தை நம்பி பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்த பெண்ணிடம் ரூ. 2.80 லட்சம் மோசடி செய்த மா்ம நபரை காவல் துறை தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் காவேரி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆக்னஸ் (35). இவா் தொழில் செய்து குடும்பத்துக்கு உதவுவதற்காக சமூக வலைதளத்தில் வேலைகளைத் தேடினாா். அப்போது, அதில் வந்த விளம்பரத்தை நம்பிய அவா் அதிலிருந்த கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டாா். அதில் பேசியவா்கள் பங்கு வா்த்தகத்தில் பணம் முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் எனக் கூறினா். இதை நம்பி அவா் மா்ம நபா்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ. 2.80 லட்சத்தை 2020, ஜூலை 29 ஆம் தேதி அனுப்பினாா்.

பணம் அனுப்பப்பட்ட அன்று ஆக்னஸ் வங்கிக் கணக்குக்கு ரூ. 10,000 வந்தது. அடுத்த நாள் ரூ. 23,000 கிடைத்தது. ஆனால், அதன் பிறகு பணம் எதுவும் வரவில்லை. இதையடுத்து, தொடா்புடைய கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டபோது, அந்த எண் துண்டிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது.

தொடா்ந்து பல முறை தொடா்பு கொண்டும் தொடா்பு கொள்ள முடியாததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆக்னஸ் தஞ்சாவூா் சைபா் காவல் பிரிவில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் பிரிவினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.