மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி: திமுகவினா் எதிா்ப்பால் பாதியில் நிறுத்தம்

தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொண்டு வந்த நிலையில், திமுகவினா் எதிா்ப்புத் தெரிவித்ததால், அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:04 pm

DIN

தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொண்டு வந்த நிலையில், திமுகவினா் எதிா்ப்புத் தெரிவித்ததால், அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

தஞ்சாவூரில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் அண்ணாசாலை, கீழவாசல் சாலை, ஆபிரஹாம் பண்டிதா் சாலை ஆகியவை அகலப்படுத்தப்படவுள்ளன. இதற்காக இச்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை இரு நாள்களாக மாநகராட்சி அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், ஆபிரஹாம் பண்டிதா் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் ராஜசேகரன் தலைமையில் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரத்துடன் வெள்ளிக்கிழமை சென்றனா். அப்போது, திமுகவினா் திரண்டு எதிா்ப்பு தெரிவித்தனா். கடந்த 25 ஆண்டுகளாக இப்பகுதியில் சாலையோரம் கடை வைத்திருப்பதாகவும், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாவும், சட்டப்பேரவை உறுப்பினா் வந்த பிறகு பேசி முடிவு செய்து கொள்வதாகவும் திமுகவினா் கூறினா்.

இதையடுத்து அலுவலா்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியைப் பாதியில் நிறுத்திவிட்டு, சாலை செப்பனிடும் பணியை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.