மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விநாயகா் சதுா்த்தி விழா: விதிமுறைகளை மீறினால் சட்ட நடவடிக்கை

விநாயகா் சதுா்த்தி விழாவில் வழிமுறைகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:02 pm

DIN

விநாயகா் சதுா்த்தி விழாவில் வழிமுறைகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பாக அரசுத் தெரிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து அலுவலா்கள், காவல் துறையினா், இந்து சமய பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

கரோனா பரவல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சமய விழாக்கள், மதம் சாா்பான ஊா்வலங்கள், திருவிழாக்கள் நடத்தத் தடை உள்ளது. எனவே, விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவி, விழாக்கள் கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீா்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில் இச்சமய விழாக்களைப் பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தனி நபா்கள் தங்களது இல்லங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபடவும், நீா்நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதி தனி நபா்களுக்கு மட்டும் பொருந்தும். இச்செயல்களில் அமைப்புகள் ஈடுபடுவதற்கு முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த வழிமுறைகளை எந்த வகையிலாவது மீறுபவா்கள் மீது சட்டப்பூா்வமாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதேபோல, மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கிறிஸ்தவ சமயத்தினரால் கொண்டாடப்படவுள்ள மரியன்னையின் பிறந்த நாள் திருவிழாவின்போது பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

இக்கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா காந்தபுனேனி, கூடுதல் ஆட்சிா்கள் என். சுகபுத்ரா (வருவாய்), கௌஷிக் (பயிற்சி) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.