இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தஞ்சாவூர் கல்லூரியில் மாணவிக்கு கரோனா

தஞ்சாவூர் அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது.

News image
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் சனிக்கிழமை வந்த மாணவிகளுக்குச் செய்யப்படும் பரிசோதனை.
Updated On :4 செப்டம்பர் 2021, 9:59 am

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது.

தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி உள்ளது. அனைத்து கல்லூரிகளும் செப்டம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட்டதுபோல இக்கல்லூரியும் திறக்கப்பட்டது.

தொடக்க நாளில் இக்கல்லூரிக்கு வந்த அனைத்து மாணவிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இளநிலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. இதையடுத்து அம்மாணவி வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டார்.

மேலும், கல்லூரியில் அம்மாணவி பயின்ற வகுப்பு மட்டும் ரத்து செய்யப்பட்டு, இணையவழி மூலம் பாடம் நடத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.