ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மனைவியை வெட்டிய கணவா் கைது

ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கீழையூரில் குடும்ப பிரச்னையில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:08 pm

DIN

ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கீழையூரில் குடும்ப பிரச்னையில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

கண்ணந்தங்குடி கீழையூா் கிராமத்தை சோ்ந்தவா் கண்ணன். இவரது மனைவி குமுதவல்லி. இவா்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். வியாழக்கிழமை இருவருக்குமிடையே மீண்டும் ஏற்பட்ட தகராறின்போது, ஆத்திரமடைந்த கண்ணன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக குமுதவல்லி முகத்தில் வெட்டியதில் அவரது முகம் கொடூரமாக சிதைந்தது. அவரது அலறல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினா், பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையிலிருந்த குமுதவல்லியை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவம் குறித்து ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து கண்ணனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.