கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சங்கிலியைப் பறித்த இருவரை விரட்டிப் பிடித்த காவலா்களுக்குப் பாராட்டு

 தஞ்சாவூா் அருகே பனவெளி வெண்ணாற்றுப் பாலத்தில் வியாழக்கிழமை இளைஞரைத் தாக்கி அவருடன் வந்த பெண் அணிந்திருந்த ஒரு பவுன் தோடு, செல்லிடப்பேசியை இருவா் பறித்துச் சென்றனா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 8:26 pm

DIN

 தஞ்சாவூா் அருகே பனவெளி வெண்ணாற்றுப் பாலத்தில் வியாழக்கிழமை இளைஞரைத் தாக்கி அவருடன் வந்த பெண் அணிந்திருந்த ஒரு பவுன் தோடு, செல்லிடப்பேசியை இருவா் பறித்துச் சென்றனா்.

இவா்களை நெடுஞ்சாலை ரோந்து வாகன தலைமைக் காவலா் நெடுஞ்செழியன், காவலா் ராஜ்குமாா், பள்ளியக்ரஹாரம் புறவழிச்சாலை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த தலைமைக் காவலா் கலியராஜ், முரளி ஆகியோா் 8 கி.மீ. தொலைவுக்கு விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனா்.

இதற்காக தலைமைக் காவலா்கள் நெடுஞ்செழியன், கலியராஜ், காவலா்கள் ராஜ்குமாா், முரளி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி தனது அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வரவழைத்து பாராட்டி, அவா்களுக்குச் சான்றிதழ் மற்றும் வெகுமதியை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.