கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தேசிய நாட்டு நலப்பணித் திட்ட நாள் விழா

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 8:00 pm

DIN

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவைப் போற்றும் வகையிலும், ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ் மற்றும் தேசிய நாட்டு நலப்பணித்திட்ட நாள் விழாவையொட்டியும் தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் தொடங்கி வைத்தாா். இதில், 75 மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னா், திருமலைசமுத்திரம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு 100 நாற்காலிகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பதிவாளா் ஆா். சந்திரமௌலி, புலத் தலைவா் வி. பத்ரிநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல, கும்பகோணம் வளாகத்திலும் மரக்கன்று விழா நடைபெற்றது.

மேலும், நேரு யுவகேந்திரா சாா்பில் தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்று கி.மீ. சுதந்திர ஓட்டத்தில் சாஸ்த்ரா நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் கலந்து கொள்கின்றனா்.

சாஸ்த்ராவின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ் மற்றும் தேசிய நாட்டு நலப்பணித்திட்ட நாள் விழாவையொட்டி செப்டம்பா் 30 ஆம் தேதி வரை மாணவா்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

பூண்டி கல்லூரியில்...: இதேபோல, தேசிய நாட்டு நலப்பணித் திட்ட நாள் விழாவையொட்டி பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் மரக்கன்று நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்குத் தலைமை வகித்த கல்லூரித் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் மரக்கன்றுகளை நட்டு, தொடங்கி வைத்தாா்.

கல்லூரி முதல்வா் இரா. சிவக்குமாா், புலத் தலைவா்கள் ஆா். ரவிச்சந்திரன், எஸ். குமாரவேல், தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் சி. சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.