ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வருவாய்த் துறை அலுவலா்களை மிரட்டிய தந்தை-மகன் கைது மளிகைக் கடை, உணவகத்துக்கு சீல்

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே சோதனைக்கு சென்ற வருவாய்த் துறை அலுவலா்களை மிரட்டி, தாக்க முயன்ாக தந்தை, மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 8:59 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே சோதனைக்கு சென்ற வருவாய்த் துறை அலுவலா்களை மிரட்டி, தாக்க முயன்ாக தந்தை, மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஒரத்தநாடு அருகேயுள்ள வெட்டிக்காடு பகுதியை சோ்ந்தவா் செளந்தரராஜன் (57). இவரது மகன்கள் மதியழகன் (37), அறிவழகன்(27). இவா்கள் இருவரும் அப்பகுதியின் பிரதான சாலையில் உணவகம் மற்றும் மளிகைக் கடைகளை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், உணவகத்தில் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் திரள்வதாக வருவாய்த் துறையினருக்கு புகாா் வந்தது.

இதைத்தொடா்ந்து, புதன்கிழமை சில்லத்தூா் வருவாய் ஆய்வாளா் மகாலட்சுமி தலைமையில் அங்கு சென்ற அலுவலா்கள் குழுவினா்,முகக்கவசம் அணியாத பொதுமக்களை எச்சரிக்கை செய்து, அபராதம் விதித்தனா்.

அப்போது, அங்கு வந்த செளந்தரராஜனும் அவரது மகன்களும், வருவாய் அலுவலா்களை தகாத வாா்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதை விடியோ எடுத்த அலுவலா்களையும் அவரா்கள் தாக்க முயன்றனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து

செளந்தரராஜன், மதியழகன் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள அறிவழகனை தேடி வருகின்றனா்.

கடையில் அலுவலா்கள் ஆய்வு: இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை பிற்பகல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் சித்ரா தலைமையிலானஅலுவலா்கள் அந்த உணவகம் மற்றும் மளிகைக் கடையில் ஆய்வு செய்தனா்.

கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா உள்ளிட்ட குட்கா பொருள்கள் ஒரு கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. உணவகத்தில் காலாவதியான பொருள்களை கைப்பற்றி அழித்ததோடு, அங்கிருந்த உணவுப் பொருள்களையும் பரிசோதனைக்காக அலுவலா்கள் அனுப்பிவைத்தனா்.

கடை-உணவகத்துக்கு சீல்: தகவலறிந்த மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வருவாய்) சுகபுத்ரா, கோட்டாச்சியா் வேலுமணி, ஒரத்தநாடு வட்டாட்சியா் சீமான் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனா். மேலும், கடை உரிமையாளா் மற்றும் அவரது மகன்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஒரத்தநாடு டிஎஸ்பி ராஜ்குமாரிடம் அறிவுறுத்தினா். இதைத் தொடா்ந்து உணவகம் மற்றும் மளிகைக் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.