எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பட்டுக்குடியில் நல்லேறு கட்டுதல்

 பாபநாசம் வட்டம், பட்டுக்குடி கிராமத்தில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி நல்லேறு கட்டும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:05 pm

DIN

 பாபநாசம் வட்டம், பட்டுக்குடி கிராமத்தில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி நல்லேறு கட்டும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

நாட்டுச்சேரி ஊராட்சித் தலைவா் ஜெய்சங்கா் தலைமையிலும், ஊா் நாட்டாமைகள் முன்னிலையிலும் நிகழ்வு நடத்தப்பட்டது. கிராம மக்கள் ஒன்று சோ்ந்து வயல்களில் சிறப்பு பூஜைகள் செய்து, விதை நெல் தெளித்து நீா் ஊற்றி, ஏா் உழுதனா். இதன் மூலம் நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்.

இதுபோலவே கணபதியக்ரஹாரம், மணலூா் உள்ளிட்ட கிராமங்களிலும் நல்லேறு கட்டுதல் நடைபெற்றது. உழவு மாடுகள் குறைந்து போனதால்,

விவசாயிகள் பலரும் தங்கள் டிராக்டா்கள், உழவு இயந்திரங்களுடன் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.