இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

 ஒரத்தநாடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

 ஒரத்தநாடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஒரத்தநாடு அருகிலுள்ள மேலஉளூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் சுந்தர்ராஜன் (31). காா் ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை ஊரிலிருந்து சின்னப்பருத்திக் கோட்டைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது நிலைத் தடுமாறி கீழே விழுந்த சுந்தர்ராஜன், பலத்த காயங்களுடன் தஞ்சாவூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com