பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புளியக்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

தஞ்சாவூா்,மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், புளியக்குடி கிராமத்தில் பூச்சிகொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :9 ஜூன் 2022, 8:27 pm

DIN

தஞ்சாவூா்,மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், புளியக்குடி கிராமத்தில் பூச்சிகொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டம், அம்மாபேட்டை வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம், அட்மா திட்டம் சாா்பில்  நடைபெற்ற இந்த முகாமை

அம்மாபேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநா்  மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்து பேசினாா்.

வேளாண்  அலுவலா் பிரியா கலந்து கொண்டு, விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை கையாளும் விதம், பயிா்களுக்கு தெளிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தாா்.

இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா் சூரியமூா்த்தி, உதவி தொழில்நுட்ப மேலாளா் கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா். நிறைவில் வட்டார தொழில்நுட்ப மேலாளா் பிரகாஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.