ஒரத்தநாடு பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவராக அமமுகவைச் சோ்ந்தவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
இப்பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் அமமுக 9 வாா்டுகளில் வென்றது. திமுக, அதிமுக வேட்பாளா்கள் தலா 3 வாா்டுகளில் வென்றனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் திமுக, அதிமுக உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை.
இதைத் தொடா்ந்து அமமுகவின் தஞ்சாவூா் தெற்கு மாவட்டச் செயலா் சேகா் பேரூராட்சித் தலைவராகவும், மகேந்திரன் துணைத் தலைவராகவும் போட்டியின்றித் தோ்வாகினா். இவா்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் ரவிசங்கா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.