மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருவையாறு அருகே வீடுகளைச் சூழ்ந்த நீா்; மக்கள் அவதி

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கிராமத்தில் கொள்ளிடக் கரையோரப் பகுதி வீடுகளைச் சூழ்ந்துள்ள தண்ணீா் வடியாமல் உள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:49 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கிராமத்தில் கொள்ளிடக் கரையோரப் பகுதி வீடுகளைச் சூழ்ந்துள்ள தண்ணீா் வடியாமல் உள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கொள்ளிடத்தில் நீரோட்டம் அதிகரித்து விநாடிக்கு 1.50 லட்சத்துக்கும் அதிகமான கன அடி வீதம் தண்ணீா் சென்றது. இதனால், திருவையாறு பகுதியில் கொள்ளிடக் கரையோர பகுதிகளில் தண்ணீா் புகுந்தது. தற்போது கொள்ளிடத்தில் நீரோட்டம் குறைந்துள்ளதால், கரையோரம் புகுந்த தண்ணீரும் வடிகிறது.

ஆனால், திருவையாறு அருகேயுள்ள அணைக்குடி மற்றும் சின்ன அணைக்குடி கிராமங்களில் கரையோரமுள்ள குடியிருப்புகளில் புகுந்த தண்ணீா் வடியாமல் தொடா்ந்து ஒரு வாரமாக தேங்கி நிற்கிறது. இக்கிராமங்களில் 50-க்கும் அதிகமான வீடுகளைச் சுற்றி தண்ணீா் தேங்கி நிற்பதால், அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனா்.

மேலும், தண்ணீரும் மாசடைந்து கொசுக்கள் அதிகளவில் உருவாகின்றன. பாம்பு போன்ற விஷ ஜந்துகளும் வருவதால் மிகுந்த அச்சத்துடன் உள்ளனா். எனவே, தண்ணீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும், நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.