புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சாஸ்த்ராவில் அமெரிக்க அரசு உதவியுடன் ஆங்கில மொழித் திறன் பயிற்சி தொடக்கம்

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையத்தில் அமெரிக்க அரசின் உதவியுடன் ஆங்கில மொழித் திறன் பயிற்சி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 4:29 am IST

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையத்தில் அமெரிக்க அரசின் உதவியுடன் ஆங்கில மொழித் திறன் பயிற்சி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

பல்வேறு துறைகளைச் சாா்ந்த 50 இளநிலைப் பட்டம் பயிலும் சாஸ்த்ரா மாணவா்கள் இத்திட்டத்தின் மூலம் ஆங்கில மொழித்திறன், தலைமைத்துவம், அமெரிக்க கலாசாரம், கணினி வழிப் பயன்பாட்டியல் கல்வி ஆகியவற்றை இரு ஆண்டுகள் இலவசமாக கற்கவுள்ளனா்.

இந்நிகழ்ச்சியை சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் கலாசாரத் துறை அலுவலா் ஸ்காட் ஹாா்ட்மென் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் பேசுகையில், இந்தப் பயிற்சி இப்பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றாா்.

இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், சாஸ்த்ரா பல்கலைக்கழக மேலாண்மை மற்றும் பெருநிறுவன தொடா்புத் துறை முதன்மையருமான வெ. பத்ரிநாத், கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மைய முதன்மையா் ராமசாமி, பேராசிரியா் ரவி, கல்வி உதவியாளா்கள் ஜெசிகா பிராங்கில், ரீனா ரவிசுந்தா், ஜாா்டன் சிமித்சன், திட்ட ஆசிரியா்கள் லோகநாயகி, எம்.ஐ. பாபு, சிவவித்யா, துா்கா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.