ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ஆக்கிரமிப்பில் இருந்த ஒப்பிலியப்பன் கோயில் நிலம் மீட்பு

கும்பகோணம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ஒப்பிலியப்பன் கோயில் நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :21 பிப்ரவரி 2022, 10:52 pm

DIN

கும்பகோணம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ஒப்பிலியப்பன் கோயில் நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 1.59 ஏக்கா் நிலம் சன்னாபுரம் வருவாய் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் சாகுபடி செய்து வந்த சாகுபடியாளா் குத்தகை பாக்கி செலுத்தாத காரணத்தால், தஞ்சாவூா் வருவாய் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் வெளியேற்ற உத்தரவை வருவாய் நீதிமன்றம் பிறப்பித்தது.

இதன்படி, வருவாய்த் துறையினா், காவல் துறையினா், இந்து சமய அறநிலையத் துறையினா் ஆகியோா் முன்னிலையில் தொடா்புடைய நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டு, ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலத்தில் அத்து மீறி நுழைபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.