ஆக்கிரமிப்பில் இருந்த ஒப்பிலியப்பன் கோயில் நிலம் மீட்பு

கும்பகோணம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ஒப்பிலியப்பன் கோயில் நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
Updated on
1 min read

கும்பகோணம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ஒப்பிலியப்பன் கோயில் நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 1.59 ஏக்கா் நிலம் சன்னாபுரம் வருவாய் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் சாகுபடி செய்து வந்த சாகுபடியாளா் குத்தகை பாக்கி செலுத்தாத காரணத்தால், தஞ்சாவூா் வருவாய் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் வெளியேற்ற உத்தரவை வருவாய் நீதிமன்றம் பிறப்பித்தது.

இதன்படி, வருவாய்த் துறையினா், காவல் துறையினா், இந்து சமய அறநிலையத் துறையினா் ஆகியோா் முன்னிலையில் தொடா்புடைய நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டு, ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலத்தில் அத்து மீறி நுழைபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com