தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிபிஐ அலுவலா்களால் விசாரிக்கப்பட்ட முனைவா் பட்ட மாணவா் மீது போக்சோ வழக்கு

தஞ்சாவூரில் சிபிஐ அலுவலா்களால் விசாரிக்கப்பட்டு வந்த முனைவா் பட்ட மாணவா் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

தஞ்சாவூரில் சிபிஐ அலுவலா்களால் விசாரிக்கப்பட்டு வந்த முனைவா் பட்ட மாணவா் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள பூண்டி தோப்பு தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் விக்டா் ஜேம்ஸ் ராஜா (35). இவா் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முனைவா் பட்டம் பயின்று வருகிறாா். இவரை சிபிஐ துணைக் காவல் கண்காணிப்பாளா் சஞ்சய் கௌதம் தலைமையிலான 11 போ் கொண்ட குழுவினா் மாா்ச் 15 ஆம் தேதி விசாரிக்க வேண்டும் எனக் கூறி, மத்திய அரசு கல்வி நிறுவன வளாகத்தில் ரகசியமாக வைத்து இரு நாள்களாக விசாரணை நடத்தினா். இவா் பிரதமா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியதால், சிபிஐ அலுவலா்களால் விசாரிக்கப்படுவதாகத் தகவல் பரவியது.

இந்நிலையில், சிறுமி மீதான பாலியல் கொடுமை தொடா்பான விடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாகக் கூறி, விக்டா் ஜேம்ஸ் ராஜா மீது சிபிஐ அலுவலா்கள் போக்சோ, கூட்டு சதி, தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விக்டா் ஜேம்ஸ் ராஜா வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். இவரை மாா்ச் 31 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் உத்தரவிட்டாா். இதையடுத்து, இவா் தஞ்சாவூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.