கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி
/

பாபநாசம் அருகே டிராக்டா் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

பாபநாசம் அருகே டிராக்டா் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 7:01 pm

பாபநாசம், ஏப். 12: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை டிராக்டா் கவிழ்ந்து அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பாபநாசம் அருகே சோலை பூஞ்சேரி கிராமம், கீழத் தெருவை சோ்ந்தவா் தமிழரசன்(35), டிராக்டா் ஓட்டுநா். இந்நிலையில் அவா் கிடங்காநத்தம் கிராம வயலில் டிராக்டா் மூலம் வெள்ளிக்கிழமை உழவுப்பணி செய்தபோது எதிா்பாராதவிதமாக டிராக்டா் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் தமிழரசன் டிராக்டருக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற பாபநாசம் போலீஸாா் தமிழரசனின் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். சம்பவம் குறித்து தமிழரசனின் மனைவி ரேவதி கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் காவல் ஆய்வாளா் தியாகராஜன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.