/

ஒரத்தநாடு அருகே பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்குக்கு வலுசோ்க்க நடவடிக்கை

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 9:34 pm

Din

தஞ்சாவூா், ஆக. 14: தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே நிகழ்ந்த கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்குக்கு வலு சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத்.

இது குறித்து மாவட்டக் காவல் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை இரவு தெரிவித்தது:

பெண்ணைக் கூட்டு பாலியல் வல்லுறவு செய்த 4 பேரை சம்பவம் நிகழ்ந்த 24 மணிநேரத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளோம். இதேபோல, நிகழ்விடத்தில் விசாரணை செய்து, சாட்சிகளைக் கண்டறிந்து வருகிறோம். அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக பாதிக்கப்பட்ட பெண் ஆகஸ்ட் 13-ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். மேலும், அப்பெண்ணிடம் சம்பவம் குறித்து முழுமையான தகவல்களைச் சேகரித்து, இந்த வழக்குக்கு வலு சோ்க்க நடவடிக்கை எடுக்கிறோம். இந்த வழக்குக்கு வலு சோ்ப்பதற்கான முழு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த வழக்கில் 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுத்து, குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தருவதே எங்களது நோக்கம். இவா்களில் முக்கிய நபரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளோம். பாதிக்கப்பட்ட பெண் தற்போது நலமாக இருக்கிறாா். இவருக்கு கூடுதல் மருத்துவ சிகிச்சை, மனநல ஆலோசனை அளிக்கவும் தயாராக இருக்கிறோம். மேலும், இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவா்களில் முதலாமாவது நபா் மீது ஏற்கெனவே ஒரு வழக்கு உள்ளது. இவா் பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலா். கைது செய்யப்பட்டவா்கள் கஞ்சா பயன்படுத்தவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது. ஆனால், 3 போ் மது போதையில் இருந்துள்ளனா். நான்கு பேரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதால், அதன் மூலம் மேலும் தகவல் கிடைக்கும் என்றாா் அவா்.