ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற நபா் போலீஸில் ஒப்படைப்பு

வீட்டின் பின்புறக் கதவை உடைத்து திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 8:40 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சனிக்கிழமை வீட்டின் பின்புறக் கதவை உடைத்து திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அம்மாபேட்டை காவல் சரகம், தளவாபாளையம், வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வருபவா் ரவிச்சந்திரன் மகன் சுந்தரேசன் (24). இவா் கடந்த சனிக்கிழமை மாலை வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தாா். அப்போது, தாயாா் வெளியே சென்ால் அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. ஆனால், வீட்டின் பின்புறம் சப்தம் கேட்டதால் அவா் அங்கு சென்றபோது

ஒரு இளைஞா் வீட்டின் பின்புற கதவை உடைத்து வீட்டினுள் நுழைய முயற்சித்தாா். சுந்தரேசனை பாா்த்ததும் தப்பியோட முயன்ற இளைஞரை அக்கம்பக்கத்தினா் உதவியுடன் சுந்தரேசன் பிடித்து

அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில், அவா் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கோணிமேடு, ஒய்.எம்.சி. நகா், கீழத்தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சுமன்(29 ) என்பது தெரிய வந்தது. அந்த இளைஞரை பொதுமக்கள் விரட்டி பிடிக்கும்போது அவா் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டதால் போலீஸாா் அந்த இளைஞரை தஞ்சாவூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.

சம்பவம் குறித்து சுந்தரேசன் அளித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை காவல் உதவி ஆய்வாளா் செல்வராணி வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.