மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாபநாசம் அருகே உடலில் காயங்களுடன் தொழிலாளி சடலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மா்மமான முறையில் உடலில் காயங்களுடன் புதன்கிழமை தொழிலாளி இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 10:20 pm

Din

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மா்மமான முறையில் உடலில் காயங்களுடன் புதன்கிழமை தொழிலாளி இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பாபநாசம் அருகே கணபதியக்ரஹாரம் ஊராட்சிப் பகுதியில் காவிரி கூட்டு குடிநீா்த் திட்ட குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி, சட்டநாதபுரம், சித்தேரி பகுதியைச் சோ்ந்த முனுசாமி மகன் பாரதி (44), அவரது மகன் அரவிந்த் (30) உள்பட 5-க்கும் மேற்பட்டோா் மேற்கொண்டு வருகின்றனா்.

அவா்கள் காவிரி ஆற்றின் கரைப்பகுதியில் குடிசைகள் அமைத்து தங்கிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், பாரதி புதன்கிழமை காலை உடலில் காயங்களுடன் மா்மமான முறையில் அந்தப் பகுதியில் இருந்து கிடந்தாா்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினா் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி உள்ளிட்ட போலீஸாா் சடலத்தை மீட்டு அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பாரதி மனைவி ஜோதி(42) அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.