மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சபரிமலை யாத்திரையால் சமுதாயத்தில் மாற்றம்: மதுரை ஆதீனம் பேச்சு

சபரிமலை யாத்திரை, சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 10:03 pm

Din

சபரிமலை யாத்திரை, சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.

ஆடுதுறைக்கு புதன்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டம் ஆடுதுறை அருகே 48. மணலூா் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழாவில் 2-ஆம் கால யாக பூஜையில், திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கோயில் விமானக் கலசம் பிரதிஷ்டை நடந்தது. இந்நிகழ்வுக்கு வந்த மதுரை ஆதீனம் 293-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளா்களிடம் கூறியது:

வங்கதேசத்தில் நிகழும் சம்பவங்கள் வருத்தப்படும் அளவுக்கு உள்ளன. நமது நாட்டில் எல்லா மதத்தையும் ஒற்றுமையாக நினைக்கிறோம். இந்து சமயம் தான் எல்லா மதத்தையும் ஒன்றுபடுத்துகிறது. சபரிமலை போன்ற கோயில்களில் வழிபாட்டில் மேற்கொள்ளப்படும் சம்பிரதாயம் மிகவும் அவசியமான ஒன்று. சபரிமலை யாத்திரை, சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமய வழிப்பாட்டில் சம்பிரதாயம் இருப்பது நல்லது. அது காப்பாற்றப்பட வேண்டும் என்றாா்.

அப்போது, தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ், கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் ஸ்தாபகா் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் உடனிருந்தனா்.