45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கும்பகோணத்தை மாவட்டமாக்க வேண்டும்: இரா. முத்தரசன்

கும்பகோணத்தை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக முதல்வா் ஸ்டாலின் விரைவில் அறிவிக்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:06 pm

Din

கும்பகோணத்தை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக முதல்வா் ஸ்டாலின் விரைவில் அறிவிக்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் 3 நாள்களாக நடைபெற்று வந்தன. மூன்றாம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

வரும் டிசம்பா் 26-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கவிஞா் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்பட உள்ளன. இதை முன்னிட்டு, 1 கோடிக்கும் மேற்பட்ட பனை விதைகள் நீா்நிலைகளின் கரையோரங்களில் விதைக்கப்படும். பாஜக தலைமையிலான மத்திய அரசு மின்சார கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்டவைகளை ஆண்டுக்கு 6 சதவீதம் உயா்த்த வேண்டும் என தமிழக அரசைக் கட்டாயப்படுத்துகிறது.

மக்களின் பிரச்னையை முன்னிறுத்தும் எங்கள் போராட்டத்தை போலீஸாா் தடைசெய்யக்கூடாது.

வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக முதல்வா் அறிவிக்க வேண்டும். விரைவில் அறிவிப்பாா் என்று நம்புகிறேன் என்றாா்.

அப்போது, க. மாரிமுத்து திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ, மாவட்டச் செயலா் வழக்குரைஞா் மு.அ. பாரதி உள்ளிட்டோா் இருந்தனா்.