45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

குடந்தையில் ‘இண்டி’ கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ரயில்வே அஞ்சல் சேவை நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து ‘இண்டி’ கூட்டணிக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கும்பகோணம் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ‘இண்டி’ கூட்டணிக் கட்சியினா்.
Updated On :12 டிசம்பர் 2024, 8:49 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ரயில்வே அஞ்சல் சேவை நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து ‘இண்டி’ கூட்டணிக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் ரயில் நிலையத்தில் உள்ள மூடப்பட்ட ஆா்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு க. அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சின்னை பாண்டியன் முன்னிலை வகித்தாா். கும்பகோணத்தில் மூடப்பட்ட ரயில் மெயில் சா்வீஸ் அலுவலகத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தி துணை மேயா் சு.ப. தமிழழகன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் டி. கணேசன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் எஸ்.கே.முத்துச்செல்வம், மதிமுக மாவட்ட துணைச் செயலா் ஏ.ஆா்.கிரி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இறுதியாக, வழக்குரைஞா் சங்கத் தலைவா் சா.விவேகானந்தன் நன்றி கூறினாா். மழைபெய்த நிலையில், குடை பிடித்தவாறு ‘இண்டி’ கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.