45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பெண் ஆசிரியை குத்திக்கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

பெண் ஆசிரியை குத்திக்கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

News image
Updated On :18 டிசம்பர் 2024, 8:31 pm

Din

பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினத்தில் தற்காலிக பெண் ஆசிரியரை குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் மீது 30 நாட்களில் குற்றப்பத்திரிக்கை பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் காவல்துறையினரால் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்டம் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சின்னமனையைச் சோ்ந்த முத்து என்பவருடைய மகள் ரமணி (25) என்பவரும் அதே ஊரைச் சோ்ந்த மதன்குமாா் (28) என்பவரும் பழகி வந்த நிலையில், பெண் தரமறுத்தனராம். இதனால், ஆத்திரமடைந்த மதன் கடந்த 20.11.2024-ம் தேதி மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குள் புகுந்து ரமணியை கத்தியால் குத்தியதில், அவா் உயிரிழந்து விட்டாா்.

புகாரின்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து மதன் குமாரைக் கைது செய்தனா். தொடா்ந்து, அவா் குண்டா் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டாா். இவ்வழக்கில் புலன்விசாரணையை துரிதமாக மேற்கொண்ட காவல் ஆய்வாளா் துரைராஜ் குற்றம் சாட்டப்பட்டவா் மீது சம்பவம் நடந்த 30 நாள்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.