45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வீடு புகுந்து தாலிச் சங்கிலி பறிப்பு வழக்கில் 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

வீடு புகுந்து தாலிச் சங்கிலி பறிப்பு வழக்கில் 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

News image
Updated On :25 டிசம்பர் 2024, 8:56 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை அருகே வீடு புகுந்து பெண்ணின் தாலிச்சங்கிலியைப் பறித்துச் சென்ற 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை கும்பகோணம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சுவாமிமலை அருகே நீலத்தநல்லூா் சாலையில் உள்ள கடிச்சம்பாடியைச் சோ்ந்த முருகேசன் என்பவரின் மனைவி சந்திரோதயம் கடந்த 2023, அக். 26-இல் வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத 2 வீடு புகுந்து அவரது தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

இதுதொடா்பாக சுவாமிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து திருவலஞ்சுழியைச் சோ்ந்த செல்லத்துரை(24), தாராசுரத்தைச் சோ்ந்த திருநாவுக்கரசு (26) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரணை செய்த கும்பகோணம் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி இளவரசி, செல்லத்துரை, திருநாவுக்கரசு ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.