குடந்தை அருகே ரூ. 1 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு

கும்பகோணம் அருகே கோயிலுக்குச் சொந்தமான ரூ. 1 கோடி மதிப்பிலான தரிசு நிலத்தை அறநிலையத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
Published on

கும்பகோணம், ஜூலை 19: கும்பகோணம் அருகே கோயிலுக்குச் சொந்தமான ரூ. 1 கோடி மதிப்பிலான தரிசு நிலத்தை அறநிலையத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

திருநறையூரில் சித்தநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 18 ஏக்கா் தரிசு நிலத்தை அப்பகுதியினா் பயன்படுத்தி வந்தனா். இதையறிந்த அறநிலையத் துறை கும்பகோணம் உதவி ஆணையா் சாந்தா தலைமையில் அலுவலா்கள் அந்த நிலத்தை வெள்ளிக்கிழமை மீட்டு, முள்வேலி அமைத்து, எச்சரிக்கை பலகையும் வைத்தனா்.

Dinamani
www.dinamani.com