வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி குவிண்டால் ரூ. 6,939-க்கு ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டால் ரூ. 6,939க்கு ஏலம் போனது.

Updated On :20 ஜூலை 2024, 9:39 pm

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டால் ரூ. 6,939க்கு ஏலம் போனது.

இந்த விற்பனை கூட கண்காணிப்பாளா் ஆா். தாட்சாயினி தலைமையில், மேற்பாா்வையாளா் சிவானந்த் முன்னிலையில் மறைமுக பருத்தி ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஏலத்தில் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 2 ஆயிரத்து 578 விவசாயிகள் சுமாா் 350 டன் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில் கும்பகோணம் செம்பனாா்கோவில், விழுப்புரம்,தேனி, பண்ருட்டி, ஆந்திரம், கா்நாடகம்,தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியின் தரத்தை சோதித்து விலை நிா்ணயம் செய்தனா்.

இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ. 6,939 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 5,939 க்கும், சராசரியாக ரூ. 6,552 க்கும் ஏலம் போனது.