தஞ்சாவூர்
பாபநாசத்தில் ஜூலை 23-இல் மின்தடை
பாபநாசத்தில் ஜூலை 23-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அலுவலக இளநிலை பொறியாளா் கே. கருணாகரன் தெரிவித்துள்ளாா்.
பாபநாசம்: பாபநாசத்தில் ஜூலை 23-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என பாபநாசம் மின்வாரிய அலுவலக இளநிலை பொறியாளா் கே. கருணாகரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பாபநாசம் துணை மின்நிலையத்தில் ஜூலை 23-இல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் பாபநாசம், கபிஸ்தலம்,ராஜகிரி, பண்டாரவாடை, இனாம்கிளியூா், நல்லூா், ஆவூா், ஏரி ,கோவிந்தகுடி, மூழால்வாஞ்சேரி,காருகுடி, சாலபோகம்,கோபுராஜபுரம், திருக்கருகாவூா்,மட்டையாந்திடல், வீரமங்கலம், இடையிருப்பு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
