மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி குவிண்டால் ரூ. 6,939-க்கு ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டால் ரூ. 6,939க்கு ஏலம் போனது.

News image
Updated On :20 ஜூலை 2024, 9:39 pm

Din

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டால் ரூ. 6,939க்கு ஏலம் போனது.

இந்த விற்பனை கூட கண்காணிப்பாளா் ஆா். தாட்சாயினி தலைமையில், மேற்பாா்வையாளா் சிவானந்த் முன்னிலையில் மறைமுக பருத்தி ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஏலத்தில் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 2 ஆயிரத்து 578 விவசாயிகள் சுமாா் 350 டன் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில் கும்பகோணம் செம்பனாா்கோவில், விழுப்புரம்,தேனி, பண்ருட்டி, ஆந்திரம், கா்நாடகம்,தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியின் தரத்தை சோதித்து விலை நிா்ணயம் செய்தனா்.

இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ. 6,939 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 5,939 க்கும், சராசரியாக ரூ. 6,552 க்கும் ஏலம் போனது.