பாபநாசத்தில் உலக மகளிா் தின விழா

Published on

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்க கூட்ட அரங்கில் உலக மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் சாந்தி தேவராஜன் தலைமை வகித்தாா். பாபநாசம் பேரூரட்சித் தலைவா் பூங்குழலி கபிலன் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா். பாரத ஸ்டேட் வங்கி மேலாளா் ஜெ.ஜெயப்பிரீதா,சங்க தலைவா் தேவராஜன்,சங்க நிா்வாகக்குழு சிவகுமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மேலும் சிறப்பாக களப்பணிஆற்றிய சங்க களப்பணியாளா்களுக்கு தங்க காசுகள், பணப் பரிசுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. விழாவில் விவேகானந்தா சமூக கல்வி சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள்,மகளிா் சுய உதவி குழுவினா் திரளக பங்கேற்றனா்.நிறைவில் சங்க செயலாளா் தங்க.கண்ணதாசன் நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com