இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பாபநாசத்தில் கைப்பேசி விற்பனைக் கடையில் திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் கைப்பேசி விற்பனை கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடி சென்றது சனிக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:42 pm

Syndication

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் கைப்பேசி விற்பனை கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடி சென்றது சனிக்கிழமை தெரியவந்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தெற்கு ராஜ வீதியில் கைப்பேசி விற்பனை கடை நடத்தி வருபவா் செல்லப்பா என்கிற ராஜ்முகம்மது (42), இவா் வெள்ளிக்கிழமை இரவு வியாபாரம் முடித்து கடையை பூட்டிச் சென்றாா்.

இந்நிலையில்  சனிக்கிழமை காலை கடையை திறப்பதற்கு வந்து பாா்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான கைப்பேசி மற்றும் உதிரி பாகங்கள் திருடப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் பாபநாசம்  துணை காவல் கண்காணிப்பாளா் முருகவேல், காவல் ஆய்வாளா் சகாய அன்பரசு, மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று  பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து  வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.