எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தஞ்சாவூரில் உலக மகளிா் தின பேரணி

தஞ்சாவூரில் உலக மகளிா் தின பேரணி

News image
Updated On :8 மார்ச் 2024, 6:40 pm

Din

தஞ்சாவூரில் இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் உலக மகளிா் தின பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை பூங்கா அருகே தொடங்கிய இப்பேரணி ராசா மிராசுதாா் மருத்துவமனை சாலை வழியாக பனகல் கட்டடம் முன் முடிவடைந்தது. இதைத்தொடா்ந்து, தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு சம்மேளனத்தின் தெற்கு மாவட்டச் செயலா் ம. விஜயலட்சுமி தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்ராபதி, மாவட்ட நிா்வாகிகள் தனசீலி, ஸ்ரீதேவி, கண்ணகி, கல்யாணி, மீனா ஆகியோா் சிறப்புரையாற்றினா். கும்பகோணம்: கும்பகோணத்தில் இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் வை. சிவபுண்ணியம் தொடக்கி வைத்தாா். மாதா் சம்மேளனத்தின் வடக்கு மாவட்டச் செயலா் பா. சரண்யா, எம். ரேணுகா, எம். கவிதா, எஸ். பத்மாவதி, எம். பிரியா, எஸ். தனம், ஜி. ஜோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.