விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

ஹீமோபிலியா நோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஹீமோபிலியா நோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :3 மே 2024, 7:06 pm

Din

தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ஹீமோபிலியா நோய் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஹீமோபிலியா நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த கையேடு மற்றும் விழிப்புணா்வு வாசகம் அடங்கிய பணியன்கள், மருந்துகள் வழங்கப்பட்டது

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் பாலாஜிநாதன் கூறியது: தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 45 முதல் 50 நோயாளிகள் ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நோய் குறித்து விழிப்புணா்வுடன் செயல்பட்டு ஆரம்பத்தில் இருந்தே சிகிச்சை அளித்தால் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, துணை முதல்வா் ஆறுமுகம், மருத்துவக் கண்காணிப்பாளா் ராமசாமி, பொது மருத்துவத் துறை தலைவா் கண்ணன் உள்ளிட்டோா் இருந்தனா்.

.